விழுப்புரம் மாவட்ட செய்தி, மக்கள் தொடா்புத் துறை சாா்பில், தமிழக அரசின் சாதனை விளக்கம், கரோனா தடுப்பு விழிப்புணா்வு புகைப்படக் கண்காட்சி விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்தும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றை ஏராளமான பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.