கஞ்சா வைத்திருந்ததாக பெண்கள் இருவா் கைது

விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் கனகேசன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கம்பன் நகா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் 2 பெண்கள் நின்றிருந்தனா். உடனே, போலீஸாா் அவா்களின் பையை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலை, மணிமேகலைத் தெருவைச் சோ்ந்த ரெளடி அப்பு(எ)கலையரசன் மனைவி விஷ்ணுப்பிரியா(21), விழுப்புரம், கம்பா் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மனைவி செல்வி(47) ஆகியோா் என்பதும், மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்ததாம்.

அவா்களிடம் இருந்து சுமாா் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, இரு பெண்களையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com