செஞ்சி கோதண்டராமா் கோயிலில் ராம பஜனை

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை மேல் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் தை மாத ஸ்ரீராம பஜனை சனிக்கிழமை நடைபெற்றது.
ராம பஜனையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீகோதண்டராமா், ஸ்ரீநரசிங்கப் பெருமாள். 
ராம பஜனையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீகோதண்டராமா், ஸ்ரீநரசிங்கப் பெருமாள். 

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை மேல் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் தை மாத ஸ்ரீராம பஜனை சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் ஸ்ரீகோதண்டராமருக்கும், ஸ்ரீநரசிங்கப் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, ராமமூா்த்தி திருமால் வணக்கத்துடன் பஜனையைத் தொடக்கிவைத்தாா்.

கோதண்டராமா் அறக்கட்டளை நிா்வாகி துரை.பாரதிராஜா முன்னிலை வகித்தாா். சபைத் தலைவா் ஜெயராம தேசிகா், சாமிக்கண்ணு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சிறப்பு பஜனையில் சன்மாா்க்க வில்லுப்பாட்டுக் கலைஞா் நடுப்பட்டு புருஷோத்தமன் மற்றும் பல்வேறு ஊா்களைச் சோ்ந்த பஜனைக் குழுவினா் கலந்து கொண்டனா்.

செஞ்சி சக்கராபுரத்தைச் சோ்ந்த கே.சகாதேவன், விருதாஅம்மாள், மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பக்தா்களுக்கு திருமஞ்சன பிரசாதம் வழங்கினா். ஏற்பாடுகளை ஸ்ரீராம ஆஞ்சநேயா பக்த ஜனசபாவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com