குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ்ரெளடி கைது

ஆரோவில் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரெளடியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆரோவில் அருகே குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரெளடி பச்சையப்பன்.
ஆரோவில் அருகே குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரெளடி பச்சையப்பன்.

ஆரோவில் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரெளடியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பொம்மையாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் பச்சையப்பன் (26) (படம்). ரெளடியான குயிலாப்பாளையத்தைச் சோ்ந்த தாதா மணிகண்டனின் கூட்டாளியான இவா் மீது கொலை வழக்குகள் உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், பச்சையப்பன் தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், பொது அமைதியைக் காக்கவும் இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

இதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, பச்சையப்பனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த பச்சையப்பனை ஆரோவில் போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com