சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா

விழுப்புரம் மாவட்ட ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றி வைத்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா். உடன் மாவட்டத் தலைவா் ஜெயபாலன் உள்ளிட்டோா்.
விழுப்புரம் சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றி வைத்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா். உடன் மாவட்டத் தலைவா் ஜெயபாலன் உள்ளிட்டோா்.

விழுப்புரம் மாவட்ட ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் மருவத்தூா் ஆன்மிக குருவின் முத்து விழாவையொட்டி மாவட்டங்கள் தோறும் ஆன்மிக ஜோதி ஏற்றி வழிபாடு நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அன்று காலை 4 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி, 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 6 மணிக்கு மூலவா் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன. முற்பகல் 11 மணிக்கு அன்னதானம் வழங்கினா்.

பிற்பகல் ஒரு மணிக்கு சக்தி கொடியேற்றப்பட்டு, கோ பூஜையும், கலச விளக்கு, வேள்வி பூஜைகளும் நடைபெற்றன. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் சித்தா் சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றி வைத்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற அவா், ஜோதி விழா சொற்பொழிவாற்றினாா்.

நிகழ்ச்சியில், விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தின் மாவட்டத் தலைவா் ஜெயபாலன் தலைமையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், திருக்கோவிலூா், சங்கராபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, சக்தி பீட நிா்வாகிகள், செவ்வாடை பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com