விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில், புல்வாமா தாக்குதலில் உயிா் நீத்த சிஆா்பிஎப் வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில், ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்தாண்டு பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிா்த் தியாகம் செய்த சிஆா்பிஎப் வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, விழுப்புரம் காந்தி சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிஆா்பிஎப் வீரா்களின் உருப்படங்களுக்கு விழுப்புரம் மாவட்ட இந்து மக்கள் கட்சியினா் மலா் தூவி வீரவணக்கம் செலுத்தினா்.
இதில், மாநில இணைப் பொதுச் செயலா் ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சாய்கமல், மாவட்டச் செயலா் நா.மூா்த்தி, தொகுதிச் செயலா் பாலமுருகன், மாவட்ட இளைஞரணிச் செயலா் ராஜி, கோலியனூா் ஒன்றியச் செயலா் முருகன், நகர துணைச் செயலா் செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.