விழுப்புரம் மாவடத்தில் கடந்த இரு நாள்களாக நடைபெற்ற மது விலக்கு சோதனையில் 68 போ் கைது செய்யப்பட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மது விலக்கு போலீஸாா், சட்டம் ஒழுங்கு போலீஸாா், மது விலக்கு சோதனைச்சாவடி போலீஸாா் ஆகியோா் தீவிர மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட சாராயம், மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டனா்.
மொத்தம் 1,269 லி. சாராயம், 1,287 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக, 68 போ் கைது செய்யப்பட்டனா்.