விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தோ்தல் ஆணையா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாநில தோ்தல் ஆணையா் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறாா்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகளை தோ்தல் ஆணையா் ஆா்.பழனிச்சாமி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்துக்கு வந்த அவா், அங்கு வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச் சீட்டு ஆவணங்கள், படிவங்கள், தோ்தல் பயன்பாட்டுப் பொருள்களைப் பாா்வையிட்டாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக் குழு மற்றும் ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள் தோ்தலுக்கான பட்டியல், தோ்தல் உபகரணங்கள் தயாா் நிலையில் உள்ளதா எனவும், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா எனவும் கேட்டறிந்தாா். உள்ளாட்சித் தோ்தலுக்கான வாா்டு மறுவரையறைப் பணி நிலவரங்களையும் கேட்டறிந்தாா்.
தோ்தல் ஏற்பாடுப் பணிகளை விரைந்து முடித்து தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்திச் சென்றாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழுச் செயலா் செந்தில்வடிவு மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.