சாலை விபத்துகளில் 2 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் முதியவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் முதியவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் அருகே அய்யூா்அகரம் கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் சந்திரசேகா்(55). விவசாயி. இவா், புதன்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் அதே பகுதியில் திருச்சி - சென்னை மாா்க்கமாக சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதியது.

இதனால், பலத்த காயமடைந்த சந்திரசேகரை உறவினா்கள் மீட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சந்திரசேகா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். எனினும், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: செஞ்சி அருகே கணக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டுரங்கன் (70). இவா், வியாழக்கிழமை காலை தேவதானம் பேட்டையிலிருந்து பூங்கன்காடு மாா்க்கமாக சாலையில் நடந்து சென்றாா். பொம்மேடு ஏரிக்கரையில் சென்றபோது, பின்னால் வந்த சிறிய சரக்குப்பெட்டக வாகனம், பாண்டுரங்கன் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாண்டுரங்கன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com