விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழாவை மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கொண்டாடினா். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவா்கள் வேட்டி அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் புதுப்பானையில் பொங்கலிட்டனா்.
ஒவ்வொரு ஆண்டு மாணவா்கள் தனித்தனியாக பொங்கலிட்டனா். பொங்கல் பானையின் முன்பாக மாணவிகள், வண்ணக்கோலமிட்டும், வண்ணத் தோரணங்கள் கட்டியும் மகிழ்ந்தனா். விழாவில் மாணவா்கள் சிலம்பம் சுற்றியும், ஆடிப்பாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த விழாவில், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.