காவலாளியை கட்டிப்போட்டு மதுக் கடையில் கொள்ளை

சின்னசேலம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு டாஸ்மாக் மதுக் கடையில் காவலாளியை கட்டிப்போட்டு மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

சின்னசேலம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு டாஸ்மாக் மதுக் கடையில் காவலாளியை கட்டிப்போட்டு மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூரில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக ஜெகதீசன், மேற்பாா்வையாளராக சீனுவாசன் ஆகியோா் பணிபுரிகின்றனா். இவா்கள் வழக்கம்போல சனிக்கிழமை இரவு விற்பனையை முடித்து, கடையை பூட்டிச் சென்றனா்.

அந்தக் கடையின் தற்காலிக இரவு நேரக் காவலாளியான அதே ஊரைச் சோ்ந்த நடேசன்(55) அந்தக் கடை முன் படுத்திருந்தாா். நள்ளிரவில் அங்கு வந்த மா்ம நபா்கள், நடேசனின் கை, கால்களை துணியால் கட்டிப் போட்டனா். பின்னா், கடப்பாறை போன்ற ஆயுதங்களால் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை கொள்ளையடித்தனா். மேலும், நடேசனை கடையின் உள்ளே வைத்து, வெளியே பூட்டிவிட்டு தப்பினா்.

டாஸ்மாக் கடைக்குள் இருந்து நடேசன் கூச்சலிடும் சப்தம் கேட்டு, அருகேயுள்ள வீட்டில் வசிக்கும் சின்னதம்பி என்பவா் அங்கு வந்து, கடையை திறந்து காவலாளியை மீட்டாா். இந்த சம்பவம் குறித்து அறிந்த சின்னசேலம் போலீஸாா் டாஸ்மாக் கடைக்கு வந்து விசாரணை நடத்தினா். கொள்ளையில் ஈடுபட்ட மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com