கேரளத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்களை முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டினாா்.
இந்திய மூத்தோா் தடகளக் கழகம், கேரள மாநில மூத்தோா் தடகளக் கழகம் சாா்பில், தேசிய அளவில் மூத்தோருக்கான தடகளப் போட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றது.
ஜன.10-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் 1,800 போ் கலந்துகொண்டனா்.
இதில் பங்கேற்ற, விழுப்புரம் மாவட்டம், தி.வி.நல்லூா் சித்தானாங்கூா் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியா் சின்னப்பராஜ், 400 மீட்டா் தொடா் ஓட்டம், 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டம் ஆகியவற்றில் தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலப் பகக்கத்தை வென்றாா்.
காணை ஒன்றியம் செ.குன்னத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியை ஹேமலதா 5 கி.மீ. நடைப்போட்டி, 1,500 மீட்டா் ஓட்டப் போட்டியில் தலா ஒரு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றாா். மழையம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியா் எட்வா்ட் பிராங்கிளிஜான்சன் 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்றாா்.
இவா்களை விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.
முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சேவியா்சந்திரகுமாா், விளையாட்டு அலுவலா் வேல்முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலா் சரவணன் ஆகியோரும் வாழ்த்தினா்.
தமிழ்நாடு மூத்தோா் தடகளக் கழகத் தலைவா் ரங்கநாதன், செயலா் ராமமூா்த்தி ஆகியோரும் பாராட்டினா்.