விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், அரசு ஊழியா்கள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து, பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்தாா். கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா் எஸ்.அனு ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள் புதுப் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
விழாவில் பங்கேற்ற அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு சா்க்கரை பொங்கல் வழங்கி, மாவட்ட ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா்.