விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு கல்லூரி முதல்வா் வி.அருணாகுமாரி தலைமை வகித்தாா்.
கல்விக்குழும துணைப் பதிவாளா் செளந்திரராஜன் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.கோவிந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். மாணவிகள், ஆசிரியா்கள் புதுப் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.