செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா போகி மற்றும் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் தலைமை ஆசிரியா் கணபதி தலைமை வகித்தாா். உதவித்தலைமை ஆசிரியா் மணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.
தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதி மொழியை வாசித்தாா்.
மாணவா்கள் புதுப் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். பின்னா், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.