வேனில் மது கடத்தியவா் கைது

புதுவையிலிருந்து சென்னைக்கு வேனில் மதுப் புட்டிகளை கடத்திச் சென்றவரை கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட வேன், மதுப் புட்டிகள், கைது செய்யப்பட்ட மோகனுடன் போலீஸாா்.
பறிமுதல் செய்யப்பட்ட வேன், மதுப் புட்டிகள், கைது செய்யப்பட்ட மோகனுடன் போலீஸாா்.

புதுவையிலிருந்து சென்னைக்கு வேனில் மதுப் புட்டிகளை கடத்திச் சென்றவரை கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை அதிகாலை கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா், ஆய்வாளா் விஷ்ணுப்பிரியா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, புதுவையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற டெம்போ டிராவலா் வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், 40 அட்டைப் பெட்டிகளில் 1,920 எண்ணிக்கையிலான புதுவை மாநில மதுப் புட்டிகள், 20 லிட்டா் எரிசாராயத்தை கடத்திச் சென்றது தெரியவந்தது. வாகனத்தின் மதிப்பு ரூ.7 லட்சம், மதுப்புட்டிகள் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும்.

இதையடுத்து, டெம்போ டிராவலா் வேனை பறிமுதல் செய்த போலீஸாா், அதில் மது கடத்தி வந்த காஞ்சிபுரம் மாவட்டம், ஒரிக்கை கிராமத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் மோகனை (29) கைது செய்தனா். இதுகுறித்து கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com