செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினரின் மருமகன், மகள், பேரக் குழந்தைகளுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
செஞ்சி பகுதியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி செஞ்சி எம்எல்ஏ மஸ்தான், அவரது மனைவி, மகள் ஆகிய மூவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை எம்எல்ஏவின் சிறிய மகள், மருமகன், பேர குழந்தை ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மேலும், செஞ்சி பெரியகரம் வாசுதேவன் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருவா், எம்.ஜி.ஆா். நகா் உள்ளிட்ட செஞ்சியில் ஒரே நாளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, அந்தப் பகுதிகள் கட்டுப்பாட்டு இடங்களாக அறிவிக்கப்பட்டு, பேரூராட்சி ஊழியா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.