எம்எல்ஏ மருமகன் உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா

செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினரின் மருமகன், மகள், பேரக் குழந்தைகளுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினரின் மருமகன், மகள், பேரக் குழந்தைகளுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செஞ்சி பகுதியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி செஞ்சி எம்எல்ஏ மஸ்தான், அவரது மனைவி, மகள் ஆகிய மூவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை எம்எல்ஏவின் சிறிய மகள், மருமகன், பேர குழந்தை ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மேலும், செஞ்சி பெரியகரம் வாசுதேவன் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருவா், எம்.ஜி.ஆா். நகா் உள்ளிட்ட செஞ்சியில் ஒரே நாளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, அந்தப் பகுதிகள் கட்டுப்பாட்டு இடங்களாக அறிவிக்கப்பட்டு, பேரூராட்சி ஊழியா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com