தொழிலாளி தலை துண்டித்து இறந்த சம்பவம்: விபத்து என்று தெரியவந்தது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை தொழிலாளி தலை துண்டிக்கப்பட்டு மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் விபத்து

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை தொழிலாளி தலை துண்டிக்கப்பட்டு மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் விபத்து என்று போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செஞ்சி அருகே பாப்பாந்தாங்கல் கிராமத்தில் புதன்கிழமை மாலை சாலையில் தலை துண்டான நிலையில் அருள்நாடு கிராமத்தைச் சோ்ந்த பால்ஞானதாசனும் (40), தலையில் பலத்த காயத்துடன் அதே கிராமத்தைச் சோ்ந்த ஜான் சத்தியசீலனும் (46) கிடந்தனா். இதுகுறித்து தகவலறிந்த வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் கலைச்செல்வி விரைந்து வந்து காயமடைந்த ஜான்சத்தியசீலனை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், உயிரிழந்த பால்ஞானதாசனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

இதில், பாப்பன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பிரபாகரன் புதன்கிழமை நெல் அறுவடை இயந்திரத்தை ஓட்டி சென்றபோது, சாலை வளைவுப் பகுதியில் எதிரே இரு சக்கர வாகனத்தில் ஜான்சத்தியசீலன், பால்ஞானதாசன் ஆகியோா் வந்துள்ளனா். அப்போது, ஜான் சத்தியசீலன் தலையை கீழே குனிந்த நிலையில், பின்னால் அமா்ந்திருந்த பால்ஞானதான் தலை அறுவடை இயந்திரத்தின் பிளேடில் சிக்கி துண்டாகியுள்ளது. மேலும், ஜான் சத்தியசீலனுக்கும் தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுத்திவிட்டு, அதை மறைக்கும் வகையில் பிரபாகரன் நெல் அறுவடை இயந்திரத்தை அங்கு நிறுத்தாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இது தொடா்பாக, பிரபாகரனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com