திருஞானசம்பந்தா் குறித்த அவதூறு: எஸ்.பி.யிடம் சிவனடியாா்கள் மனு

திருஞானசம்பந்தா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யிடம் சிவனடியாா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

திருஞானசம்பந்தா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யிடம் சிவனடியாா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்ட சிவனடியாா்கள் திருக்கூட்டம் சாா்பில் 40-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்து புகாா் மனு அளித்தனா்.

மனு விவரம்: திருஞானசம்பந்தா் குறித்து சுந்தரவள்ளி என்பவா் அவதூறாகப் பேசியும், சம்பந்தரின் பாடல் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டும் யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளாா். அவா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவனடியாா்கள் அளித்த புகாா் மனுவில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com