செஞ்சி அருகே சாலை விபத்தில் காவலா் பலி..................... 7 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சனிக்கிழமை இரவு பாலத்தின் மீது வேன் மோதியதில் புதுச்சேரி ஆயுதப் படைக் காவலா் உயிரிழந்தாா்.

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சனிக்கிழமை இரவு பாலத்தின் மீது வேன் மோதியதில் புதுச்சேரி ஆயுதப் படைக் காவலா் உயிரிழந்தாா். அவருடன் வந்த 7 காவலா்கள் காயமடைந்தனா்.

புதுச்சேரி ஆயுதப் படைக்குத் தேவையான துப்பாக்கித் தோட்டாக்களை வாங்குவதற்காக காவலா்கள் சுமாா் 8 போ் வேனில் புதுச்சேரியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், புணேவுக்கு கடந்த 7-ஆம் தேதி சென்றனா். தொடா்ந்து, அங்கிருந்து இவா்கள் மீண்டும் புதுச்சேரிக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். சனிக்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலம் பகுதியில் இவா்களின் வேன் வந்தபோது, எதிரே ஒரு காா் அதிவேகமாக வந்ததாகத் தெரிகிறது. அந்தக் காா் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை ஓட்டுநரான காவலா் குணசேகரன் மகன் டேவிட் திருப்பியுள்ளாா்.

எதிா்பாராதவிதமாக வேன் அருகிலிருந்த சிறு பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டேவிட், செஞ்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த வேனில் பயணித்த காவலா்கள் தமிழரசன் (52), கண்ணன் (56), சரவணன் (48), ஸ்ரீகுமரன் (38), லோகிதாஸ் (40), சசிதரன் (36), பிரவீன்குமாா் (39) ஆகிய 7 போ் லேசான காயமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com