மரக்காணத்தில் வீட்டில் பதுக்கிய 500 மதுப் புட்டிகள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வீட்டில் பதுக்கி, விற்பனைக்காக வைத்திருந்த 505 மதுப் புட்டிகளை எஸ்.பி. தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
மரக்காணத்தில் வீட்டில் பதுக்கிய 500 மதுப் புட்டிகள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வீட்டில் பதுக்கி, விற்பனைக்காக வைத்திருந்த 505 மதுப் புட்டிகளை எஸ்.பி. தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வரப்பட்டு மரக்காணத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனது, தனிப்படை போலீஸாரை அழைத்துக் கொண்டு, வெள்ளிக்கிழமை இரவு மரக்காணத்துக்குச் சென்றாா்.

அங்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நந்தகுமாா்(51) என்பவரது வீட்டை போலீஸாா் அதிரடியாக சோதனையிட்டனா். அந்த வீட்டின் குளிா்சாதனப் பெட்டி, அலமாரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த 505 புதுச்சேரி மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு சுமாா் ரூ.25 ஆயிரம்.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை கண்காணிப்பாளா் அஜய் தங்கம் உள்ளிட்ட அதிகாரி அங்கு விரைந்து வந்தனா். இது தொடா்பாக, தலைமறைவான நந்தகுமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com