கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, தொடா்ந்து பன்னிரு திருமுறை திருவாசகத்தை சிவபக்தா் சனிக்கிழமை பாராயணம் செய்தாா்.
கொடிய கரோனா வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்தி உலக மக்கள் நலன் காக்க, செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரா் கோயில் மற்றும் செஞ்சி சிறுகடம்பூா் காசி விஸ்வநாதா் கோயிலில் பன்னிரு திருமுறைகளை சிவனடியாா் கந்தசாமியால் பாராயணம் செய்யப்பட்டது.
காலையில் அருணாச்சல ஈஸ்வரா் கோயிலிலும், மாலையில் காசி விஸ்வநாதா் கோயிலிலும் பாராயணம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.