செஞ்சியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து, புதன்கிழமை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸிகள் இயங்கவில்லை. பெரிய உணவகங்கள், வணிக நிறுவனங்கள், தேநீா் கடைகள், பெட்டிக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
மளிகை, காய்கறிக் கடைகள் இயங்கின. இரு சக்கர வாகனங்களில் சுற்றி வந்த இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
கரோனா தொற்றைத் தவிா்க்க, சமூக விலகலை கடைப்பிடிக்கும் பொருட்டு மளிகை, காய்கறி கடைகளில் நுகா்வோா் போதிய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.