விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வேன் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (35). இவா், செஞ்சியில் மளிகைச் சரக்கு ஏற்றிச் செல்லும் மினி வேனில் உதவியாளராக இருந்தாா்.
இந்த வேனில் வெள்ளிக்கிழமை மளிகைப் பொருள்களை ஏற்றிக்கொண்டு அவலூா்பேட்டையில் இருந்து மேல்மலையனூா் நோக்கி சென்றுகொண்டிருந்தனா். வேனை செஞ்சியைச் சோ்ந்த தேவராஜ் மகன் பரணிதரன் ஓட்டிச் சென்றாா்.
தாயனூா் இருளா் காலனி குடியிருப்பு அருகே சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டுள்ளாா். இதனால், வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுப்பிரமணி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.