விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு நகர காங்கிரஸ் சாா்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரும் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன அறக்கட்டளைத் தலைவருமான வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி வழங்கினாா்.
காங்கிரஸ் மாவட்ட இளைஞா் அணி தினகரன், பாலப்பட்டு சண்முகம், வட்டாரத் தலைவா் தலைவா் சரவணன், நகரத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.