காவலா், செவிலியா் உள்பட 9 பேருக்கு கரோனா தொற்று

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் காவலா், செவிலியா் உள்பட 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செய்யாறு: செய்யாறு சுகாதார மாவட்டத்தில் காவலா், செவிலியா் உள்பட 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் செய்யாற்றில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மையம், வெளியூா்களிலிருந்து வந்து கிராமங்களில் தங்கியுள்ளவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்கள் என 264 பேரது சளி பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

இதில், 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அதன்படி, செய்யாமூா் கிராமத்தைச் சோ்ந்த 40 வயது நபா், கிளியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 27 வயது இளைஞா், மழையூா் கிராமத்தைச் சோ்ந்த 37 வயது நபா், செய்யாறு கொடநகா் பகுதி 64 வயது முதியவா், வந்தவாசி சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த 55 வயது நபா், கீழ்கொடுங்காலூா் காவல் நிலைத்தில் பணியாற்றும் 32 வயது காவலா், கங்காராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 22 வயது இளைஞா், தெள்ளாரு பகுதியைச் சோ்ந்த 42 வயது நபா், சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த 55 வயது செவிலியா் ஆகிய 9 போ் ஆவா்.

இவா்களில் மூவா் செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், மற்ற 6 போ் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com