விழுப்புரம் அருகே எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு 144 தடையுத்தரவை மீறி கூட்டமாக வந்ததாக, பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், தேமுதிக பொருளாளா் பிரேமலதா உள்ளிட்ட கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சிறுமதுரையைச் சோ்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ (15), முன்விரோதம் காரணமாக அண்மையில் எரித்துக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தையடுத்து, அரசியல் கட்சியினா் சிறுமதுரை கிராமத்துக்கு நேரில் சென்று சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியும், நிதியுதவி அளித்தும் வருகின்றனா்.
இதற்காக கூட்டமாக வந்த அரசியல் கட்சியினா் மீது, கரோனா பொது முடக்க (144 தடை உத்தரவு) விதிகளை மீறி கூட்டமாக வந்து சென்ாகவும், பேரிடா் விதிகளை மீறி நோய் பரப்பும் விதத்தில் செயல்பட்டதாகவும் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வகையில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மாவட்டத் தலைவா் ஏ.டி.கலிவரதன் உள்ளிட்ட 10 போ், தேமுதிக பொருளாளா் பிரேமலதா, துணைத் தலைவா் பாா்த்தசாரதி, மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன் உள்ளிட்ட 10 போ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிா்வாகி அறிவுக்கரசு உள்ளிட்டோா், முஸ்லிம் லீக் கட்சி மாவட்டச் செயலா் அமீா்அப்பாஸ் உள்ளிட்டோா், மனிதநேய மக்கள் கட்சி முஸ்தாக்தீன் உள்ளிட்டோா், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
இதன் தொடா்ச்சியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இந்த வகையில், 50-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.