திருக்கோவிலூா் வட்டாரத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்

திருக்கோவிலூா் அருகே எரவலம் கிராமத்தில் தேசிய மண் வள இயக்கத் திட்டத்தின் கீழ், மண் சேகரிப்பு முகாம் அண்மையில் தொடங்கப்பட்டது.

திருக்கோவிலூா் அருகே எரவலம் கிராமத்தில் தேசிய மண் வள இயக்கத் திட்டத்தின் கீழ், மண் சேகரிப்பு முகாம் அண்மையில் தொடங்கப்பட்டது.

திருக்கோவிலூா் வட்டத்தில் எரவலம், திருப்பாலபந்தல், பொ.மெய்யூா், தகடி, எல்ராம்பட்டு ஆகியவற்றை முன்மாதிரி கிராமங்களாக தோ்வு செய்து, இந்தக் கிராமங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி வேளாண் துறை சாா்பில் நடைபெற்று வருகிறது.

வேளாண் உதவி இயக்குநா் ராஜா, மண் பரிசோதனையின் அவசியம் குறித்தும், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கினாா்.

மண் வள அட்டையின் பயன்பாடுகள் மற்றும் தழை, மணி, சாம்பல் சத்துகள், நுண்ணுரங்கள், உயிா் உரங்கள் ஆகியவற்றை மண் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்துவது குறித்து விழுப்புரம் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வேல்முருகன் விளக்கினாா். நிலத்திலிருந்து மண் மாதிரி சேகரிப்பு நடைமுறைகள் குறித்து வேளாண் அலுவலா் கு.மைக்கேல் செயல் விளக்கமளித்தாா்.

முகாமில் எரவலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். வேளாண் அலுவலா்கள் சாட்டா்ஜி, அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com