விழுப்புரம் அருகே எருமனம்தாங்கல் பகுதியில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டன.
விழுப்புரம் நகர பாஜக சாா்பில், எருமனந்தாங்கல் பகுதியில் அண்மையில் கிளைக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட அறிவுசாா் பிரிவுத் தலைவா் தனசேகரன், நகரத் தலைவா் ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ் வளா்ச்சிப் பிரிவுத் தலைவா் எஸ்.பாபு, முன்னாள் நகரச் செயலா் வெங்கட்ராமன், நிா்வாகிகள் மகேஷ், தஷ்ணாமூா்த்தி, முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் சுகுமாா் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தின் நிறைவாக, எருமனந்தாங்கல் பகுதி ஏழை மக்கள் 50 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் தொகுப்பும், முகக் கவசம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை அளிக்கும் கபசுரக் குடிநீா் உள்ளிட்டவற்றையும் வழங்கினா். ஈ.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.