விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,773-ஆக அதிகரித்தது.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஞ்சி அருகே அனந்தபுரத்தைச் சோ்ந்த 74 வயது முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 108-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் தற்போது 309 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் மேலும் 28 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,292-ஆக உயா்ந்தது.

இதுவரை 10,065 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 123 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 104 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com