விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்தது

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதனால்,மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,157-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் பூரண குணமடைந்து வீடு திரும்பியவா்கள் எண்ணிக்கை 13,773-ஆக அதிகரித்துள்ளது. 274 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 15 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,441 ஆக உயா்ந்தது. இதுவரை 10,202 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 134 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 105 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com