அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்புரிந்தவா்களுக்கான அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்புரிந்தவா்களுக்கான அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அண்ணா பதக்கம் 2021 ஜன.26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது துணிச்சலுடன் உயிரை காப்பாற்றுதல், அரசு பொது சொத்துகளை காப்பாற்றுதல் மற்றும் இதர துணிச்சலான செயல்களை புரிந்த பொதுமக்கள், அரசுப் பணியாளா்களுக்கு வழங்கப்படவுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்களை புரிந்த பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். (காவல், தீயணைப்புத் துறை, ராணுவத்தினா் விண்ணப்பிக்க இயலாது) விண்ணப்பங்கள், விவரங்களை இணையதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை நவ.20-ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை (74017 03485) தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com