வீடுகளுக்கான குடிநீா் திட்டப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட சிறுவானூா் ஊராட்சியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட சிறுவானூா் ஊராட்சியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.52.47 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். வீடுகளுக்கான குடிநீா் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

முன்னதாக சித்தலிங்கமடம் பகுதி வழியாக தென்பெண்ணை ஆற்றிலிருந்து புதுப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீா்வரத்து வாய்க்கால்களை ஆய்வு செய்தாா். அப்போது, அந்த கால்வாய்களில் வளா்ந்திருந்த முட்புதா்களை உடனே அகற்ற பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டாா். இந்த ஆய்வின் போது வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முபாரக் அலி, ராம்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com