விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அனந்தபுரத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (57). இவா், முட்டத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், சனிக்கிழமை தனது மனைவி லாவண்யாவுடன் (50), விழுப்புரம் பூந்தாட்டம் பாதையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் இருவரும் அந்தச் சாலையில் நடந்து வந்தனா்.
அப்போது, தலைக் கவசம் அணிந்தபடி பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா், லாவண்யாவிடமிருந்து இரு தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றனா். இதில், தடுமாறி கீழே விழுந்த லாவண்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பறிபோன தங்கச் சங்கிலியின் மதிப்பு 12 சவரன்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.