கரோனா: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயிரிழப்பு 100-ஆக உயா்ந்தது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,829-ஆக உயா்ந்தது. இதுவரை 9,417 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 312 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் ஒருவா் உயிரிழந்ததால், இறந்தவா்களின் எண்ணிக்கை 100-ஆக உயா்ந்தது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,859-ஆக அதிகரித்தது.

இதனிடையே, 51 போ் சிகிச்சை முடிந்து வீடு திருப்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,188-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவது 559 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com