விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரு மகள்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து தாயும் அதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இவா்களில் ஒரு மகள் உயிரிழந்தாா்.
மரக்காணம் அருகே உள்ள செட்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (40). கோழிப்பண்ணை கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (38). இந்தத் தம்பதிக்கு மகாலட்சுமி (17), கோமதி (15) ஆகிய இரு மகள்கள். இருவரும் அருகே புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே பிளஸ் 2, 9-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.
மதுப்பழக்கம் உள்ள குமாா், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல, வெள்ளிக்கிழமை இரவும் குமாா், கவிதா இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினா்.
முன்னதாக, கவிதா தனது மகள்கள் இருவருக்கும் சாப்பாட்டில் பூச்சி மருந்து கலந்துகொடுத்துவிட்டு, தானும் அதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. இதையறிந்த அக்கம்பக்கத்தினா், உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவரையும் மீட்டு, காலாப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு மகாலட்சுமி உயிரிழந்தாா். கவிதா, கோமதி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.