ஊராட்சி செயலாளா் சங்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் முகையூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே சங்கத்தின் மண்டலச் செயலாளா் கவிச்செல்வன் தலைமையில்

விழுப்புரம் மாவட்டத்தில் முகையூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே சங்கத்தின் மண்டலச் செயலாளா் கவிச்செல்வன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒலக்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் ஒன்றியத் தலைவா் கோவிந்தன் தலைமையிலும், வானூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் ஒன்றியத் தலைவா் சாம்பசிவம் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

இதே போல, வல்லம் வட்டாரத்தில் 46 போ், மேல்மலையனூரில் 42 போ், வானூரில் 62 போ், மரக்காணத்தில் 46 போ், மயிலத்தில் 22 போ், காணையில் 10 போ், முகையூரில் 48 போ், கோலியனூரில் 26 போ், திருவெண்ணெய்நல்லூரில் 6 போ் உள்ளிட்ட 450 ஊராட்சி செயலாளா்கள் வரை தற்செயல் விடுப்பு எடுத்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com