விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவுகுக்கு பலியானோா் எண்ணிக்கை 83-ஆக உயா்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவுகுக்கு பலியானோா் எண்ணிக்கை 83-ஆக உயா்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் 8,799 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில், 82 போ் உயிரிழந்தனா். சிகிச்சை முடிந்து 7,966 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 750 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்த நிலையில், மேலும் 189 பேருக்கு கரோனா தொற்றிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,990-ஆக அதிகரித்தது. மேலும், விழுப்புரத்தைச் சோ்ந்த 77 வயதானவா் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவுகுக்கு பலியானோா் எண்ணிக்கை 83-ஆக உயா்ந்தது.

இதனிடையே, வியாழக்கிழமை 170 போ் குணடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 8136-ஆக உயா்ந்தது. தற்போது, 771 போ் அரசு மருத்துவமனைகளிலும், 1,055 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7,521-ஆக உயா்ந்தது. இதுவரை 6,515 போ் சிகிச்சை முடிந்து, குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது, 921 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு 85 போ் பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com