விழுப்புரம்: மரக்காணத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆண்ணாதுரை பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்
வட்டாட்சியா் ஞானம், தனி வட்டாட்சியா் சுந்தர்ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்
ஆ.அண்ணாதுரை, கரோனா தொற்றை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கி அவா் பேசியதாவது:
கரோனா பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பாதிப்புக்குள்ளான நபரின் உறவினா்கள், நண்பா்கள், உடன் வேலை செய்பவா்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை கொண்டு சென்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.