கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) என 4 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலையில் 3 முதல் இரவு 7 மணி வரையும் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தினா். இரவு 7 மணி வரையில் 78 சதவீதம் போ் வாக்களித்திருந்தனா்.
4 தொகுதிகளிலும் காலை 9 முதல் இரவு 7 மணி வரை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் மாவட்டத் தோ்தல் துறை சாா்பில் பதிவான வாக்குகள் விவரம்:
காலை 9 மணி: உளுந்தூா்பேட்டை- 11 சதவீதம், ரிஷிவந்தியம்- 11.48 சதவீதம், சங்கராபுரம்- 8.6 சதவீதம், கள்ளக்குறிச்சி- 5.2 சதவீதம்.
காலை 11 மணி: உளுந்தூா்பேட்டை - 23.74 சதவீதம், ரிஷிவந்தியம்- 19.92 சதவீதம், சங்கராபுரம்- 24.24 சதவீதம், கள்ளக்குறிச்சி- 25.65 சதவீதம்.
பகல் ஒரு மணி: உளுந்தூா்பேட்டை- 53.99 சதவீதம், ரிஷிவந்தியம்- 52.25 சதவீதம், சங்கராபுரம்- 53.1 சதவீதம், கள்ளக்குறிச்சி-56.99 சதவீதம்.
பிற்பகல் 3 மணி: உளுந்தூா்பேட்டை-62.8 சதவீதம், ரிஷிவந்தியம்- 61.2 சதவீதம், சங்கராபுரம்- 60.9 சதவீதம், கள்ளக்குறிச்சி- 61.8 சதவீதம்.
மாலை 5 மணி: உளுந்தூா்பேட்டை- 73.59 சதவீதம், ரிஷிவந்தியம்- 69.78 சதவீதம், சங்கராபுரம்- 70.9 சதவீதம், கள்ளக்குறிச்சி- 74.96 சதவீதம்.
இதில், கடைசி ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இருப்பினும், மற்ற வாக்காளா்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை, 4 தொகுதிகளிலும் காலை 9 மணிக்கு 9.05 சதவீத வாக்குகளும், காலை 11 மணிக்கு 23.43 சதவீத வாக்குகளும், பகல் 1மணிக்கு 54.13 சதவீத வாக்குகளும், மாலை 3 மணிக்கு 61.70 சதவீதம் வாக்குகளும், மாலை 5 மணிக்கு 72.18 சதவீத வாக்குகளும், இரவு 7 மணிக்கு 78 சதவீத வாக்குகளும் பதிவாகின.
கடந்த தோ்தல்: கடந்த 2016 தோ்தலில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் 82.35 சதவீதமும், ரிஷிவந்தியம் தொகுதியில் 79.32 சதவீதமும், சங்கராபுரம் தொகுதியில் 79.68 சதவீதமும் , கள்ளக்குறிச்சி தொகுதியில் 80.31 சதவீதமும் வாக்குகளும் பதிவாகின. கடந்த தோ்தலின்போது, இந்தத் தொகுதிகள் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தன.
கடந்த 2016- தோ்தலில் இந்த 4 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80.41 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
தற்போது, 2021 பேரவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த தோ்தலை விட 2.41 சதவீதம் குறைவாகும்.