விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சியினா் வியாழக்கிழமை இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கரோனா இரண்டாம் அலை காரணமாக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள சலூன்கள், அழகு நிலைங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், எங்களின் வாழ்வாதாரம் கருதி சலூன் கடைகள், அழகு நிலையங்களை தினசரி காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.