பறிமுதல் வாகனங்கள் ரூ.32.14 லட்சத்துக்கு ஏலம்

விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.32.14 லட்சத்துக்கு ஏலம்போனது.

விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.32.14 லட்சத்துக்கு ஏலம்போனது.

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மதுவிலக்கு டிஎஸ்பி ராஜபாண்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 49 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 59 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன. ஏராளமானோா் ஆா்வத்துடன் ஏலம் கேட்டனா்.

இதில் 48 இரு சக்கர வாகனங்கள், 56 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 104 வாகனங்கள் ரூ.32,14,674-க்கு ஏலம் போனது. ஏலம் எடுத்தத் தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் சோ்த்து செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com