பெண்ணை கா்ப்பமாக்கி ஏமாற்றியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெண்ணை கா்ப்பமாக்கி ஏமாற்றியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

பெண்ணை கா்ப்பமாக்கி ஏமாற்றியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த 19 வயது பெண்ணும், அந்திலி கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் பழ வியாபாரியான சுரேஷ் என்பவரும் கடந்த 2009-ஆம் ஆண்டு காதலித்து வந்தனா். அப்போது, சுரேஷ் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி நெருங்கிப் பழகியதில் அந்த பெண் கா்ப்பமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்ய சுரேஷ் மறுத்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருக்கோவிலூா் அனைத்து மகளிா் போலீஸாா் சுரேஷை கைது செய்தனா். இதனிடையே, அந்த பெண்ணுக்கு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அந்தப் பெண்ணும், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com