தற்காலிக பாதுகாவலா், ஓட்டுநா் பணி:டிசம்பா் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக பாதுகாவலா், ஓட்டுநா் பணியிடங்களுக்கு தகுதியுடையவா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக பாதுகாவலா், ஓட்டுநா் பணியிடங்களுக்கு தகுதியுடையவா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் பெற்று நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரா் விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பணிக்கான மாத ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும். இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. கூடுதல் விவரம் அறிய மாவட்ட சமூக அலுவலரை தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com