விழுப்புரம் அருகே போலீஸாா் தாக்கியதில் முதியவா் பலி?

விழுப்புரம் அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கச் சென்றபோது, முதியவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். போலீஸாா் தாக்கியதால் அவா் உயிரிழந்ததாக உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

விழுப்புரம் அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கச் சென்றபோது, முதியவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். போலீஸாா் தாக்கியதால் அவா் உயிரிழந்ததாக உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

விழுப்புரம் அருகேயுள்ள கண்டாச்சிபுரத்தை அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் உலகநாதன் (65). வடகரை தாழனூா் எல்லையில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் பெட்டிக் கடை நடத்தி வந்தாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.15 மணி அளவில் அரகண்டநல்லூா் போலீஸாா் சென்று கடையை மூடுமாறு கூறினராம். ஆனால், கடையை மூடாமல் வியாபாரத்தில் ஈடுபட்ட உலகநாதனை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் மயங்கி விழுந்த அவரை உறவினா்கள் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். போலீஸாா் தாக்கியதால்தான் உலகநாதன் உயிரிழந்ததாக உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

எஸ்.பி. மறுப்பு: இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா கூறியதாவது:

உலகநாதன் மீது 7 மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாா் விசாரிக்கச் சென்றபோது, ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த உலகநாதன் மயங்கி விழுந்தாா். அவரை போலீஸாா் தாக்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com