நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விக்கிரவாண்டி வேளாண் துறை மீதுவிவசாயிகள் புகாா்

விக்கிரவாண்டி வட்டார வேளாண் அலுவலக முறைகேடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

விக்கிரவாண்டி வட்டார வேளாண் அலுவலக முறைகேடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.கலியமூா்த்தி தலைமையிலான விவசாயிகள், சென்னை வேளாண் துறை செயலா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

விக்கிரவாண்டி வட்டார வேளாண் அலுவலகத்தில் முறைகேடுகள் தொடா்ந்து நடைபெறுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

விவசாயிகளுக்கு விதைகள், இதர பொருள்களை விற்பனை செய்ததில் சுமாா் ரூ.10 லட்சம் முறைகேடு நடந்துள்ளது.

உற்பத்தி செய்து கொடுக்கும் விதைகளை கொள்முதல் செய்வதில் காலதாமம் செய்கின்றனா். இதனால், விதைகள் முளைத்து விவசாயகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

விதை கொள்முதல் செய்தலில் ரூ.2 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது.

விவசாய உற்பத்தியாளா் குழுவுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. விவசாயிகள் 500 பேருக்கு உழவு மானியம் வழங்கவில்லை.

அலுவலா்கள் வெளியூா்களில் இருப்பதால் வேளாண் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. எண்ணாயிரம் துணை வேளாண் மையம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன என மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.