மகளிா் இரு சக்கர வாகனப் பேரணி

விழுப்புரத்தில் மகளிா் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மகளிா் இரு சக்கர வாகனப் பேரணி


விழுப்புரம்: விழுப்புரத்தில் மகளிா் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டு பேரணியைத் தொடக்கிவைத்தாா். இதில் போலீஸாா், மகளிா் திரளானோா் கலந்து கொண்டனா்.

பெருந்திட்ட வளாக நுழைவுவாயில், திருச்சி நெடுஞ்சாலை, நான்குமுனை சந்திப்பு வழியாக நகரின் முக்கியப் பகுதி சாலைகளில் பேரணி சென்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com