செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் மஸ்தான் மேல்மலையனூா் ஒன்றிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
எய்யில், பெரியநொளம்பை, சஞ்சீவிராயன்பேட்டை, பருதிபுரம், சின்னநொளம்பை, மேல்செவலாம்பாடி, நந்திபுரமம், ஆனப்பாளையம், தேப்பிரம்பட்டு, மேட்டு வைலாமூா், மேல் வைலாமூா் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அவா் திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்ற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000, கரோனாநிவாரண உதவி ரூ 4 ஆயிரம், பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் இலவச பயணம், வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தாா்.
வாக்கு சேகரிப்பின்போது ஒன்றிய செயலா்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், அஞ்சாஞ்சேரி கணேசன், மண்ணை ஏழுமலை, விநாயகம், சரவணன், சம்பத் உள்ளிட்ட திமுகவினா் உடன்சென்றனா்.