விழுப்புரம்
மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
மரக்காணத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (72), விவசாயி. இவா், திங்கள்கிழமை மாலை மரக்காணம் அருகே கைப்பாணி கிராமத்தில் உள்ள தனது விளைநிலத்துக்குச் சென்று மின்மோட்டாா் பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, மின்சாரம் உடலில் பாய்ந்து பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்ததை உறுதி செய்தனா். சடலத்தை மரக்காணம் போலீஸாா் உடல்கூறு ஆய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.