நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், கிராமப் பகுதிகளில் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட அமா்வு நீதிபதியுமான இளவழகன் அண்மையில் விழுப்புரத்தில் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். உடன் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.